+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பாகம் 3)

1_E.png

நாம் போதனை அமர்வுகளுக்கு வருவதற்குக் காரணம், தேவனுடைய வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கேட்பதற்காகும்.

நீங்கள் தொடர்ந்தும் வார்த்தையைக் கேட்கும்போது, நீங்கள் போதகரைப் பின்பற்ற முடியும்.

உங்களுக்கு அவருடைய குரலைக் கேட்கக் கூடுமாவதுடன், மேலும், "இப்போதும் அவர் ஒரு நல்ல தேவன் என்பதை நான் விசுவாசிக்கிறேன்!" என உங்களால் கூற முடியுமாகும்.

இயேசு வந்து தம்மை வெளிப்படுத்தும் வரை மக்கள் தேவனைப் பற்றி பல்வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தேவனை தங்களுடைய வாழ்க்கையை அழிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கொடுங்கோலனாகவே நினைத்தார்கள்.

ஆனால், இயேசுவையோ நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்ததையும் பிசாசினால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சுகம் அளித்ததையும், அவர்கள் கண்டார்கள். அவர் யார்மேல் கைகளை வைத்தாரோ, அவர்கள் குணமடைந்தார்கள், விசுவாசத்தோடு அவரைத் தொட்டவர்களும் குணமடைந்தார்கள்.

மேலும், "நீங்கள் என்னைப் காண்பீர்களானால் என்றால், என் பிதாவையும் காணபீர்கள்" என்றார். (யோவான் 14:9)

இயேசு பிதாவை வெளிப்படுத்தினார், அதன் மூலம் அவருக்கு பிசாசின் கிரியைகளை அழிக்கக் கூடுமானது.

பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட்டுவிட்டன, இப்போது எதிரியின் சகல வல்லமையின் மீதும் அவர் உங்களுக்கு சகல அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார்.

நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராக இருந்தால், உங்களால் அதிகமான சீஷர்களை உருவாக்க முடியும்.

ஆனால் நீங்கள் நிலையற்றவராக இருந்து கொண்டு, “சரி, நான் விசுவாசிக்கிறேன், ஆனால் விசுவாசிக்கவும் முடியவில்லை”என்பீர்களானால், நீங்கள் ஒருபோதும் சீடர்களை உருவாக்க மாட்டீர்கள்.

சீஷர்கள் எனும்போது அவர்கள் மும்முரமாக இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் திட மனதுடையவர்களாக இருப்பார்கள்: “உலகம் என் பின்னால், கர்த்தர் என் முன்னால். நான் உலகத்தை விட்டுப் பிரிந்து, கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுகிறேன்” என்று கூறுகிறவர்களாக இருக்கிறார்கள்.

BELIEVERS’ FELLOWSHIP

_______________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#852)]

Read 66 times